Master OTT Release Date
பொங்கல் அன்று தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் மாஸ்டர். கிட்ட தட்ட 10 மாத இடைவெளிக்கு பிறகு முதல் முறையாக ஒரு பெரிய பட்ஜெட் படம் தற்போது வெளியாகி உள்ளது.
இந்த படம் வெளியான 5 நாட்களில் திரையரங்களுக்கு மக்கள் கூட்டம் வருமா வராத என்ற கேள்விக்கு மத்தியில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திர தெலுங்கான போன்ற மாநிலங்களில் மாபெரும் வசூல் சாதனை களை படைத்தது கொண்டிருக்கிறது.
மாஸ்டர் திரை படமானது வெளியாகும் முன்பு பல பிரச்சனைகளை சந்தித்தது குறிப்பாக மாஸ்டர் படம் இந்தியாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் மட்டுமே வெளியிட வேண்டும்.
மற்றும் வெளிநாடுகளில் விஜயின் முக்கிய வசூல் ஏரியாவான பிரான்ஸ் மற்றும் மலேசியா போன்றகளில் நாடுகளில் படத்தை மாஸ்டர் படத்தை ரீலிஸ் செய்ய முடியாத சூழ் நிலைகள் இதனால் மாஸ்டர் வசூல் பாதிக்க படும் என்ற கருத்து நிலவியது.
இதையலாம் விட படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே திருட்டு தனமாக லீக் ஆன மாஸ்டர் படத்தின் முக்கிய காட்சிகள் என பட குழுவிற்கு பெரும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.
5 நாட்களில் 150 கோடியா :
வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் படம் வெளியாகியிருந்தாலும் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது மாஸ்டர் திரைப்படம்.
இது இந்திய சினிமாவிற்கு பெருமையான நிகழ்வு ஆகும் இந்தியளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாகவே வசூலை வாரி குவித்துள்ளது.வரும் நாட்களில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்யும் என்று கூற படுகிறது
மாஸ்டர் படம் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது .ஆனால், மாஸ்டர் படக்குழு எங்களது முடிவில் உறுதியாக இருக்கிறோம். அதாவது, கண்டிப்பாக திரையரங்கில் மட்டுமே மாஸ்டர் வெளியாகும் என்று அறிக்கை அளித்தது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடும் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று ஏற்கனவே செய்தி வெளியானது.
தற்போது மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையைமுன்னிட்டு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வருவதால்,எப்போது வெளியாகும் என்ற தேதி விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகவில்லை(Master OTT Release Date) ஆனால் நான்கு வாரங்களுக்குப் பிறகே அமேசான் பிரைம் வீடியோவில் மாஸ்டர் படத்தை வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.