Vignesh Shivan Nayanthara Marriage

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் இயக்கிய ’நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்தார். அப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றும்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இணைந்து மீண்டும் பணியாற்ற உள்ளனர்.
மேலும் படிக்க : KGF Chapter 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது: யஷ் படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
டைரக்டர் விக்னேஷ் சிவன், நயன்தாரா பற்றியும் அவர்கள் திருமணம் எப்போது நடைபெறும் என்று சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விவாத்திற்கு உள்ளாகும்.
கடந்த வருடங்களில் மௌனமாய் இருந்த விக்னேஷ் சிவன் முதல் முறையாக நயன்தாராவுடனான திருமணம் பற்றி பிரபல யூடுபே விவாத்தில் தெரிவித்துள்ளார்.
#VigneshShivan #Nayanthara #KaathuVaakulaRendruKadhal
நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்று இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் கேட்டபோது அவர்,’ பல இணைய தள பக்கங்களில் இதுவரை எங்களுக்கு 22 முறை யாவது திருமணம் செய்து வைத்திருப்பார்கள்.
எங்கள் திருமணத் துக்கு முன்னதாக இருவருமே சில நோக்கங்கள் மற்றும் சில திட்டங்களையும் செயல் படுத்த வேண்டி உள்ளது. அதனை முடித்த பிறகுதான் தனிப்பட்ட எங்கள் வாழ்க்கை பற்றி சிந்திக்க உள்ளோம்.
தற்போது எங்கள் கவனம் முழுவதும் சினிமாவில் தான் இருக்கிறது. லவ் எப்போது போர் அடிக்கிறதோ அப்போது கல்யாணம் செய்துகொள்வோம். அதற்கான நேரம் வரும்போது கண்டிப்பாக எல்லோரிடமும் சொல்வோம்’ என விக்னேஷ் சிவன் கூறினார்.
மேலும் படிக்க : OTTயில் மாஸ்டர் ? தளபதி விஜய் முடிவு ?